Tuesday 19 March 2013

Award for Excellence in the Filed of Literature
( Launched by Vijay TV – Sigaram Thotta Pengal - 2013 )

__________________________________________________________________________









பெண் தான் வாழ்வதற்கும், தன்னை நிரூபிப்பதற்கும் நிச்சய்ம் போராட வேண்டியிருக்கிறது. இதற்கு விதிவிலக்கான பெண்கள் எவரும் இல்லை என்றே எண்ணுகிறேன். 

அவள் கவிதை எழுதினாலும் எழுதாவிட்டாலும், சிறுமியாக இருந்தாலும், முதிர்ந்தவளானாலும், படித்தவளானாலும், பயிலாதவளானாலும், கிராமத்தில் வாழ்ந்தாலும், நகரத்தில் வாழ்ந்தாலும்... இனம், மொழி, மதம், நாடு கடந்து, உலகமெங்கும் பெண் மரணம் வரை போராட வேண்டியிருக்கிறது. அந்த சக்தியை அவள் பெற்றுமிருக்கிறாள்.

இந்நிகழ்வு, என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல உந்துதலையும், உறுதியையும் ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும், நண்பர் திரு. அன்டனி மற்றும் திரு. சுந்தரராஜன் அவர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கிறேன். மேலும் என்னுடைய நூல்களைப்பதிப்பித்த பதிப்பகங்களான காலச்சுவடு, க்ரியா, மூன்றாவது மனிதனுக்கும் நன்றிகள். குறிப்பாக காலச்சுவடு கண்ணன், க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களோடு இந்தப் பெருமிதத்தைப் பகிர்ந்து கொள்கின்றேன்.

அனைத்தையும் சாத்தியமாக்கித் தந்த இறைவனுக்கும் என் அஸீமிற்கும் நன்றி.
 
                                           
                                         நீயா நானா அன்ரனி, அஸீம், அனார்

                              நீயா நானா அன்ரனி, அஸீம், அனார், சுந்தரராஜன், வளர்மதி அம்மா



                                          அனார், தமிழச்சி தங்கபாண்டியன்


- அனார்
18.03.2013




for more, please click the bellow link:

https://www.youtube.com/watch?v=E4PHAtdUuMo

No comments: