Monday 4 March 2013

சிகரம் தொட்ட பெண்கள் -பெண் சாதனையாளர் விருது விழா-2013
-------------------------------------------------------------------------------------------------


என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஒரு செய்தியை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். சமூக செயற்பாடு, விஞ்ஞானம்,தொழில் நுட்பம், அரச சேவை, மருத்துவம், கல்வி, களிப்பூட்டல், இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளிலும் அசாதாரணமான அடைவுகள் மூலம் சாதனைகளை நிலை நாட்டிய இளைய தலைமுறைப் பெண்களை 'சிகரம் தொட்ட பெண்கள் ' என்ற தலைப்பில் விஜய் டி .வி . ஆண்டு தோறும் கௌரவித்து வருவதைப் பலரும் அறிந்திருப்பார்கள்.

இந்த வகையில் இவ் ஆண்டின் இலக்கியத் துறைக்கான சாதனைப் பெண்ணாக கவிஞர் அனார் அவர்கள் விஜய் டி .வி. யால் அறிவிக்கப் பட்டுள்ளார்.

அவரையும், வெவ் வேறு துறைகளில் சாதனைகள் புரிந்த இதர பெண்களையும் கௌரவிக்கும் நிகழ்வு 10.03.2013 அன்று சென்னை விஜய் டி .வி. கலையகத்தில் நடை பெறவிருக்கின்றது.

பெரும் பரப்பொன்றிலிருந்து அவர் தேர்வு செய்யப் பட்ட செய்தியானது மூன்று விதங்களில் என்னை மகிழ்ச்சி கொள்ள வைக்கின்றது.

1. விருது பெறத் தகுதியான எழுத்தாற்றலை அவர் கொண்டிருக்கிறார்.

2..அவர் ஓர் ஈழத்தவர் என்ற பிரதேசம் சார்ந்த பெருமிதம்.

3.அறிமுகமான நாள் தொட்டு இன்று வரை கீறல் விழாத அவருடனான இலக்கியம் சார்ந்த இனிய நட்பு.

அவருக்கு வழிகாட்டிகள் என யாரையும் என்னால் குறிப்பிட முடியவில்லை.அவர் சுயமாக உருவாக்கிக் கொண்ட ஈரம் ததும்பும் மொழியும், கவிதைகளூடாகப் பரவும் காதல் வாசனையுந்தான் இத்தகைய 'சிகரங்களை ' நோக்கி அவரை அழைத்துச் செல்கின்றன.

சிகரம் என்பது ஓர் எல்லையின் குறியீடு. அதற்குப் பின் எட்ட எதுவுமில்லை என்றாகி விடும்.ஆனால் அனாருக்கு எல்லை தாண்டும் வல்லமை உண்டு என்பதை நான் அறிவேன்.

என் மகிழ்ச்சியில் பங்கு கொண்டு அவரை வாழ்த்து மாறு அன்புடன் தோழர்களையும்,தோழியரையும் கேட்டுக் கொள்ளுகின்றேன். 

உமா வரதராஜன்,
கல்முனை ,
இலங்கை. 
27.02.2013

1 comment:

புல்லாங்குழல் said...

புல்லாங்குழலில் மூலம் உங்களைப் பற்றி தெரிந்திருந்த என் மனைவியும், மகளும் விஜய் டிவி நிகழ்ச்சியை பார்த்து தங்களின் மகிழ்வை என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள். வாழ்த்துகள் சகோதரி!